மெட்ராஸை மிஸ் பண்ணிட்டேனே, மிஸ் பண்ணிட்டேனே: புலம்பும் ஜீவா

|

சென்னை: தன்னை தேடி வந்த மெட்ராஸ் பட வாய்ப்பை நழுவவிட்டதை நினைத்து ஜீவா புலம்புகிறாராம்.

ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் படம் நன்றாக ஓடுகிறது. நீண்ட நாள் கழித்து கார்த்திக்கு ஒரு ஹிட் கிடைத்துள்ளது என்று ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். படம் நன்றாகப் போவதால் கார்த்தி மகிழ்ச்சியில் உள்ளார். அதே சமயம் மெட்ராஸ் படத்தை நினைத்து ஒரு நடிகர் கவலையில் உள்ளார். அவர் தான் ஜீவா.

மெட்ராஸை மிஸ் பண்ணிட்டேனே, மிஸ் பண்ணிட்டேனே: புலம்பும் ஜீவா

இயக்குனர் ரஞ்சித் முதலில் ஜீவாவை சந்தித்து தான் மெட்ராஸ் கதையை கூறி நடிக்குமாறு கேட்டுள்ளார். கதையை கேட்ட ஜீவா படத்தில் இரண்டாவது ஹீரோவுக்கு தான் முக்கியத்துவம் இருக்கிறது எனக்கு இருக்காது போன்று என்று கூறி நடிக்க மறுத்துள்ளார்.

அதன் பிறகே ரஞ்சித் நேராக கார்த்தியிடம் சென்று கதையை கூற அவர் ஓ.கே. சொல்லியிருக்கிறார். சில கதைகளை கேட்கும்போது பெரிதாக தெரியாது ஆனால் படமாக்கப்பட்டு ரிலீஸான பிறகு ஹிட்டாகும். சில கதைகள் கேட்கும்போது ஆஹா, ஓஹோ என்று இருக்கும் ஆனால் வெளியான பிறகு ஓடாமல் போகலாம்.

நடிகர்கள் இப்படி பட வாய்ப்புகளை ஏற்க மறுத்து அது ஹிட்டானது இது ஒன்றும் முதல் முறை அல்ல.

 

Post a Comment