மும்பை: மனைவியை பிரிந்து வாழும் ரித்திக் ரோஷனுக்கும், நடிகை இஷா குப்தாவுக்கும் இடையே ல்கதா சைஆ என்று பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுவது குறித்து நடிகை விளக்கம் அளித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனும், இஷா குப்தாவும் மிகவும் நெருங்கிப் பழகுவது தான் பாலிவுட்டில் பலரது கண்ணையும் உருத்தியுள்ளது. காரணம் துபாயில் விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர்கள் அதன் பிறகு ஹோட்டலில் ஓரமாக உள்ள மேஜையில் அமர்ந்து கடலை போட்டுக் கொண்டே சாப்பிட்டது தான்.
இதெல்லாம் பாலிவுட்டில் ஒரு மேட்டரே இல்லை என்றாலும் ரித்திக்கும், இஷாவும் இதுவரை ஒரு படத்தில் கூட சேர்ந்து நடிக்காதது தான் பலரும் புருவத்தை உயர்த்த காரணம்.
ரித்திக்
மனைவியை பிரிந்து வாழும் ரித்திக்கிற்கு 40 வயதானாலும் மனிதர் இன்னும் சிக்கென்று இருக்கிறார். அதனால் அவர் வாழ்வில் மீண்டும் ஒரு காதல் வரும் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற வேளையில் தான் இந்த பேச்சு கிளம்பியுள்ளது.
இஷா
இந்த காதல் கிசுகிசு பற்றி அறிந்த இஷா அதை மறுத்துள்ளார். நான் ரித்திக்கை டேட் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
2 முறை
நான் ரித்திக் ரோஷனை இதுவரை இரண்டு முறை தான் பார்த்துள்ளேன். துபாயில் கிளப் துவக்க விழாவில் ஒரு முறை பார்த்தேன், எங்கள் ஏஜென்சி அளித்த தீபாவளி பார்ட்டியில் பார்த்தேன், அவ்வளவு தான் என்றார் இஷா.
ஆசை
அனைவரையும் போன்று நானும் ரித்திக்கின் தீவிர ரசிகையாக்கும். அவருடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது என்று இஷா கூறியுள்ளார்.
Post a Comment