சென்னை: நான் எல்லாம் கோடீஸ்வரி என்று கூறி படப்பிடிப்பில் புதுமுக நடிகை பண்ணும் பந்தா தாங்க முடியவில்லையாம்.
இடுப்பழகியின் தங்கையின் பெயரை வைத்திருக்கும் நடிகை தீராத விளையாட்டுப் பிள்ளை பெயர் கொண்ட நடிகரின் படம் மூலம் கோலிவுட் வந்தார். மச்சான்ஸ் நடிகையின் மாநிலத்தவரான அவர் தமிழில் இதுவரை 2 படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
ஸ்டார் ஹோட்டலில் தான் தங்குவேன், படப்பிடிப்பில் சொகுசு கேரவன் தான் வேண்டும், நான் சொன்னது தான் சம்பளம் என்று அம்மணி கண்டிஷன் மேல் கண்டிஷன் போடுகிறாராம். இப்ப தான் நடிக்க வந்துள்ளீர்கள் அதற்குள் இத்தனை கண்டிஷனா என்று கேட்டால், நான் எல்லாம் கோடீஸ்வரி. இப்படி நடித்து தான் சம்பாதிக்க வேண்டும் என்று இல்லை, ஏதோ பொழுதுபோக்கிற்காக தான் நடிக்கிறேன் என்கிறாராம்.
அம்மணியின் இந்த கமெண்ட்டை நிச்சயம் பலர் மனதில் வைத்து செயல்படுவார்கள் என்று கோடம்பாக்கத்தில் கூறப்படுகிறது. முன்னதாக நாட்டாமையின் மகளும் எனக்கு நடித்து பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment