அடுத்த படத்துக்கு ஹீரோயின் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த மணிரத்னத்துக்கு ஒரு வழியாக நாயகி கிடைத்துவிட்டார்.
தமிழில் இதுவரை எவ்வளவோ முயன்றும் காலூன்ற முடியாமல் போன நித்யா மேனன்தான் மணிரத்னத்தின் அடுத்த பட நாயகி.
துல்க்வார் சல்மான் நாயகனாக நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
குரு, ராவணன், கடல் என தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் மணிரத்னம், இந்தப் படத்தில் தனது பழைய படம் ஒன்றையே ரீமேக்கப் போவதாக செய்திகள் வருகின்றன.
சென்னையிலும் மும்பையிலும் நடப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.
துல்க்வார் சல்மான் - நித்யா மேனன் ஜோடி மலையாளத்தில் வெற்றி ஜோடியாகத் திகழ்கிறது. இருவரும் இணைந்த உஸ்தாத் ஓட்டல், பெங்களூர் டேஸ் ஆகிய படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றவை என்பது நினைவிருக்கலாம்.
வரும் திங்கட்கிழமை மணிரத்னத்தின் புதிய படப்பிடிப்பு தொடங்குகிறது!
Post a Comment