கட்அவுட் விபத்து: 'சேட்டன்கள்' திரட்டிய நிதியை பலியான ரசிகரின் குடும்பத்திடம் அளித்த விஜய்

|

கோவை: கேரளாவில் தனது கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்கையில் தவறி விழுந்து இறந்த ரசிகரின் குடும்பத்திற்கு விஜய் ரூ.3 லட்சம் நிதி அளித்தார். அப்போது விஜய் கண்கலங்கிவிட்டார்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வடக்கன்சேரியைச் சேர்ந்த உன்னி என்பவர் தீபாவளி அன்று கத்தி படத்தை பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து வெளியே வந்தார். வந்தவர் அங்கிருந்த விஜய்யின் பிரமாண்ட கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்கையில் தவறி விழுந்து பலியானார்.

கட்அவுட் விபத்தில் பலியான ரசிகரின் குடும்பத்தை பார்த்ததும் 'அழுத' விஜய்

இறந்த உன்னியின் குடும்பத்திற்கு கேரள ரசிகர்கள் திரட்டிய நிதியை நேரில் விஜய் அளிப்பார் என்று கூறப்பட்டது. இதற்காக அவர் வடக்கன்சேரி செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் கத்தி வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள விஜய் திங்கட்கிழமை கோவை சென்றார். கோவைக்கு வந்த உன்னியின் குடும்பத்தாரை சந்தித்த விஜய் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவருக்கு அழுகை வந்துவிட்டது. மேலும் ரசிகர்கள் திரட்டிய ரூ.3 லட்சம் நிதியையும் அளித்தார். இனி ஏதாவது உதவி வேண்டுமானால் தன்னிடம் கேட்குமாறும் அவர் தெரிவித்தார்.

கட்அவுட் விபத்தில் பலியான ரசிகரின் குடும்பத்தை பார்த்ததும் 'அழுத' விஜய்

ரசிகர்கள் திரட்டிய நிதியை தான் விஜய் கொடுத்தார் என்று நீங்கள் பார்த்தீர்களா என்று கேட்கலாம். நாங்கள் பார்க்கவில்லை. ஆனால் பிரபல பி.ஆர்.ஓ. தெரிவித்துள்ளார்.

 

Post a Comment