திரையுலகம் நேற்று உண்ணாவிரதமிருந்ததற்கு காரணம் யாருடைய வற்புறுத்தலுமில்லை. அம்மா மீதான அன்பும் நம்பிக்கையும்தான் என்று தெரிவித்துள்ளார் சரத்குமார்.
ஆளும் தரப்பில் நிர்பந்தம், மிரட்டல் காரணமாகத்தான் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நேற்று திரையுலகம் உண்ணாவிரதம் நடத்தியதாக ஒரு தரப்பு செய்தி பரப்பியது.
இதுகுறித்து உண்ணாவிரதத்துக்கு தலைமை வகித்த சரத்குமாரிடம் கேட்டபோது, 'எங்களை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லி யாரும் வற்புறுத்தவில்லை. மிரட்டவும் இல்லை.
நாங்கள் அனைவரும் அம்மாவின் மீதான் அன்பு மற்றும் நம்பிக்கையை உணர்த்தும் வகையில் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டோம். அம்மா இந்த திரைத்துறைக்கு அளித்த ஆதரவு ஏராளம். அவருக்கு இந்த நேரத்தில் நாங்கள் தரும் ஆதரவு இது," என்றார்.
இந்த உண்ணாவிரதத்தை போராட்டம் என்று சிலர் சொல்வது தவறு. இது உணர்வுகளைக் காட்டும் ஒரு நிகழ்வு மட்டுமே என்பதை, உண்ணாவிரதத்தில் பங்கேற்ற இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் தெரிவித்தார்.
+ comments + 5 comments
She has not done anything for film industry
Done mistakes justice rendered film industry can not pass judgements wrong move sarathkumar allakkkai
Politics and film different
Allakkkai let him read the report
Supports corruption
Raja kanimozhi Marian also will be punished
Will film industry fight fir that also
Post a Comment