உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை வரவேண்டாம் என தன் அலுவலக வாசலில் எழுதிப் போட்டிருக்கிறார் ஒரு பிரபல இயக்குநர்.
அவர் 'வாய்யா கூலிங் கிளாஸ்' என இயக்குநர் பாலாவால் அழைக்கப்பட்ட மிஷ்கின்.
செனடாப் சாலையில் மிஷ்கினின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கதவில்தான் இப்படி எழுதி ஒட்டி வைத்துள்ளார்.
இந்த ஆண்டு பிசாசு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் அவர், அடுத்த ஆண்டும் ஒரு புதிய படம் இயக்குகிறார். அந்தப் படத்துக்கும் போதிய உதவி இயக்குநர்கள் அவரிடம் உள்ளார்களாம்.
எனவே புதிய உதவி இயக்குநர்கள் செப்டம்பர் 2015-க்குப் பிறகு வந்தால் போதும் என்பதால் அப்படி எழுதிப் போட்டுள்ளாராம்.
Post a Comment