சென்னை: இந்திய சினிமாவுக்கு ரஜினிகாந்தின் பங்களிப்பு மிக அதிகம். அவருக்கு இந்த விருது தாமதமாகத்தான் கிடைத்திருக்கிறது, என்று கூறியுள்ளார் பிரபல நடிகர் மனோஜ் பாஜ்பாய்.
கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க வந்திருந்தார் மனோஜ் பாஜ்பாய்.
ரஜினிக்கு அளிக்கப்பட்ட நூற்றாண்டு இந்திய சினிமாவின் சிறந்த பிரமுகர் விருது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், "ரஜினிகாந்த் இந்திய சினிமாவுக்கு செய்துள்ள பங்களிப்பு ஏராளம்.
அவருக்கு இந்த கவுரவம் முன்பே கிடைத்திருக்க வேண்டும். தாமதமாகத்தான் இப்போது வழங்கப்பட்டுள்ளது. இன்னும் உயரிய விருதுகள் அவருக்கு கிடைக்க வேண்டும்," என்றார்.
Post a Comment