சென்னை: விசாகப்பட்டணத்தை உருக்குலைத்த ஹூட் ஹூட் புயல் நிவாரண நிதி திரட்ட நடத்தப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதித்துள்ளார் கமல் ஹாஸன்.
நவம்பர் 30-ம் தேதி நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு மேமு சைத்தம் டெலிதான் என்று பெயரிட்டுள்ளனர்.
ஹைதராபாதில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு சினிமாவின் அனைத்து நடிகர் நடிகைகளும் பங்கேற்க உறுதியளித்துள்ளனர். சிரஞ்சீவி, நாகார்ஜூனா, வெங்கடேஷ், என்டிஆர், பாலகிருஷ்ணா, பவன் கல்யாண் உள்ளிட்ட அனைவருமே பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் நடிகர் நடிகைகளையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த அழைப்பை ஏற்றுள்ள நடிகர் கமல் ஹாஸன், நிச்சயம் நிகழ்ச்சியில் பங்கேற்பேன் என்று உறுதி கூறியுள்ளார்.
நட்சத்திரங்களுடன் விருந்து, நட்சத்திர கிரிக்கெட், கபடிப் போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன. இவற்றை 12 மணி நேரம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள். இவற்றின் மூலம் கிடைக்கும் தொகையை ஹூட் ஹூட் நிவாரண நிதிக்கு வழங்குகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ரஜினிக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
Post a Comment