எம்புட்டு பொய், எம்புட்டு பொய்: பிரபல நாளிதழை விளாசிய ரித்திக், அர்ஜுன் ராம்பல்

|

மும்பை: பாலிவுட் நடிகர்கள் ரித்திக் ரோஷன் மற்றும் அர்ஜுன் ராம்பல் ஆகியோர் முன்னணி ஆங்கில நாளிதழை விளாசியுள்ளனர்.

முன்னணி நாளிதழான டைம்ஸ் ஆப் இந்தியா தீபிகா படுகோனேவின் கிளீவேஜ் பற்றி செய்தி வெளியிட்டது. இதையடுத்து தீபிகா அந்த நாளிதழை விளாசித் தள்ளினார். பதிலுக்கு நாளிதழும் தீபிகாவை விளாசியது.

இந்நிலையில் அதே நாளிதழ் நடிகர் அர்ஜுன் ராம்பலுக்கும் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவியான சூசனுக்கும் இடையே நெருக்கம் அதிகரித்துள்ளது. அதனால் நெருங்கிய தோழிகளாக இருந்த ராம்பலின் மனைவி மெஹர் ஜெசியாவும், சூசனும் தற்போது பிரிந்துவிட்டார்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியை பார்த்த ரித்திக் மற்றும் ரம்பல் டென்ஷனாகி ட்விட்டரில் அந்த நாளிதழை விளாசியுள்ளனர்.

ராம்பலின் ட்வீட்,

பாம்பே டைம்ஸ் உங்களுக்கு யார் பணம் கொடுத்தது? குறை கூறும் இந்த முகம் தெரியாத நபர்கள் யார்? துணிச்சல் இருந்தால் அவர்கள் யார் என்று முதலில் கூறுங்கள். என்னையும், என் குடும்பத்தையும் விட்டு தள்ளி இருங்கள்.

ரித்திக் ரோஷனின் ட்வீட்,

எவ்வளவு பொய்யான செய்திகள் அச்சிடப்படுகிறது என்பது மக்களுக்கு தெரிந்தால், பேப்பர்கள் அதை விற்பதை நிறுத்திவிடும். இன்று அருவருப்பாக உணர்கிறேன்.

 

Post a Comment