முன்னாள் காதலி பிபாஷாவுடன் சேர த்ரிஷாவை பிரிந்த ராணா?

|

சென்னை: நடிகர் ராணா தனது முன்னாள் காதலியான பிபாஷா பாசுவுடன் மீண்டும் சேரவே த்ரிஷாவை பிரிந்ததாக கூறப்படுகிறது.

த்ரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் காதலித்து வந்தார்கள். பல ஆண்டுகளாக அவர்கள் பிரிவதும், சேர்வதுமாக உள்ளனர். தற்போது அவர்கள் பிரிந்துள்ளனர். இந்த முறை கதம் கதம் போல. த்ரிஷாவுக்கும் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னாள் காதலி பிபாஷாவுடன் சேர த்ரிஷாவை பிரிந்த ராணா?

இந்நிலையில் ராணா த்ரிஷாவை பிரிந்ததே தனது முன்னாள் காதலியான நடிகை பிபாஷா பாசுவுடன் சேரத் தான் என்று கூறப்படுகிறது. நடிகர் ஜான் ஆபிரகாமை காதலித்த பிபாஷா பாசு பின்னர் ராணாவை காதலித்தார். கடந்த சில நாட்கள் வரை நடிகர் ஹர்மன் பவேஜாவின் காதலியாக வலம் வந்தார் பிபாஷா. அவர்களுக்கு திருமணம் நடக்க உள்ளது என்று கூட செய்திகள் வெளியாகின.

இப்பொழுது என்னவென்றால் பிபாஷா திரும்பி வந்த ராணாவை ஏற்றுக் கொண்டுவிட்டதாக கூறப்படுகிறது. ராணாவும், த்ரிஷாவும் ஒவ்வொரு முறை பிரியும்போதும் ராணாவின் வாழ்வில் வேறொரு நடிகை நுழைந்திருப்பார்.

ராணா, பிபாஷா மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது. மறுபடியும் முதலில் இருந்தா ராணா?

 

Post a Comment