கத்தி படம் பிடித்திருக்கிறது, ஆனால் தெலுங்கு ரீமேக்கில் நான் நடிக்கவில்லை: மகேஷ் பாபு

|

ஹைதராபாத்: கத்தி திரைப்பட ரீமேக்கில் தான் நடிக்கப்போவதில்லை என்று தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தெரிவித்தார்.

ஹுட்ஹுட் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு தெளுஹ்கு திரையுலகம் இன்று ஏற்பாடு செய்திருந்தது. ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தீம் வாயிலாக நிகழ்ச்சிகளை நடத்தினர்.

கத்தி படம் பிடித்திருக்கிறது, ஆனால் தெலுங்கு ரீமேக்கில் நான் நடிக்கவில்லை: மகேஷ் பாபு

நடிகர் மகேஷ்பாபு மற்றும் நடிகை சமந்தா ஆகியோர் கேள்வி-பதில் நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது கத்தி திரைப்பட ரீமேக்கில் நீங்கள் நடிப்பீர்களா என்று சமந்தா, கேட்டதற்கு மகேஷ்பாபு அளித்த பதில்:

நான் கத்தி திரைப்படத்தை பார்த்தேன். அந்த படம் எனக்கு பிடித்திருக்கிறது. சமீப கால விஜய் படங்களில் கத்திதான் பெஸ்ட் படம் என்று நினைக்கிறேன். ஆனாலும், நான் கத்தி படத்தின் ரீமேக்கில் நடிக்க போவதில்லை. ஏனெனில் நான் வழக்கமாக ரீமேக் படங்களில் நடிப்பதை பெரிதாக விரும்புவதில்லை. என்றார்.

இதன்பிறகு தனது வாழ்வின் மகிழ்ச்சி, கஷ்டம் போன்ற பல்வேறு விஷயங்களை கூட்டத்தினரிடையே மகேஷ் பாபு பகிர்ந்து கொண்டார்.

 

Post a Comment