சென்னை: கோலிவுட்டில் ஜொலிக்க முடியாமல் தவிக்கும் தனது 2 மகள்களையும் முன்னேற்றாமல் ஓய்வது இல்லை என்ற முடிவுக்கு முன்னாள் ஹீரோயின் வந்துள்ளாராம்.
ஒரு காலத்தில் கோலிவுட்டில் கொடிகட்டிப் பறந்தவர் அந்த இரண்டு எழுத்து ஹீரோயின். திருமணம், குழந்தைகள் என்றான பிறகு அவர் சினிமாவுக்கு முழுக்குப்போட்டுவிட்டார். இந்நிலையில் தாய் வழியில் அவரது இரண்டு மகள்களும் நடிக்க வந்துள்ளனர்.
மூத்த மகளுக்கு தமிழில் ஒரு படம் ஓடியது. இளைய மகளுக்கோ அவர் இதுவரை நடித்த இரண்டு படங்களும் ஊத்திக் கொண்டது. இருவரும் சினிமா உலகில் ஜொலிக்க முடியாமல் தவிக்கிறார்கள். தான் வெற்றிக் கொடி நாட்டிய இடத்தில் தனது மகள்கள் தத்தளிப்பதை பார்த்து முன்னாள் ஹீரோயின் கவலையில் உள்ளாராம்.
இப்படியே கவலைப்பட்டால் வேலைக்கு ஆகாது என்று ஒரு முன்னணி ஹீரோவை பிடித்து அவருக்கு மகள்களை ஜோடியாக்கி படம் எடுப்பது என்று முடிவு செய்துள்ளதாம் தாய்க்குலம். இதற்காக கமர்ஷியல் ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர்களை தொடர்பு கொண்டு கதை கேட்டு வருகிறாராம்.
தாய்க்குலத்தின் இந்த முயற்சி தந்தைக்குலத்திற்கு பிடிக்கவில்லையாம். ஆனாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தனது வேலையை பார்த்து வருகிறாராம் தாய்க்குலம்.
Post a Comment