விஜய்வசந்த் - நிகிஷா பட்டேல் நடிக்கும் சிகண்டி!

|

தரமான படம் என்றும் - பக்கா கமர்ஷியல் பார்முலா என்றும் - வியாபார வெற்றிபெற்ற படம் என்றும் பரபரப்பாக பேசப்பட்ட "என்னமோ நடக்குது" படத்தை இயக்கிய ராஜபாண்டி, மீண்டும் விஜய் வசந்தை வைத்து இயக்கும் படம் சிகண்டி.

நிகிஷா பட்டேல் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் நாசர், சரண்யா, மனோஜ்.கே.பாரதி நடிக்கிறார்கள். கௌரவ வேடத்தில் சூரி நடிப்பார் என்று தெரிகிறது.

விஜய்வசந்த் - நிகிஷா பட்டேல் நடிக்கும் சிகண்டி!

சிகண்டியில் அழுத்தமான - வேறுபட்ட கதாப்பாத்திரம் ஒன்றில் சமுத்திரகனி நடிக்கிறாராம்.

இந்தப் படம் குறித்து இயக்குனர் ராஜபாண்டி கூறுகையில், "பள்ளிக் கல்வி சம்மந்தமாக சில படங்கள் ஏற்கனவே வந்திருக்கிறது. மேலும் வரலாம். அவர்கள் இதுவரை சொல்லாத, சொல்லப்படாத விஷயங்கள் நிறைய உள்ளன.

விஜய்வசந்த் - நிகிஷா பட்டேல் நடிக்கும் சிகண்டி!

அந்த விஷயங்களை முழுமையாக தருவதற்காக கிட்டத்தட்ட ஆறு மாதகாலம் சம்மந்தப்பட்ட கல்வியாளர்கள் - சமூக ஆர்வலர்கள், பத்திரிகை நண்பர்களுடன் ஆலோசித்து பல நல்ல தகவல்களை திரட்டி உள்ளோம். அதைத்தான் திரைக்கதையாக உருவாக்கியுள்ளோம்.

ஒரு இயக்குனராக என் பார்வையில் கல்வியின் தரம் - குறிப்பாக பள்ளிக் கல்வியின் தரம் இப்படியெல்லாம் இருக்கலாமே என்கிற ஆதங்கம் இந்த சிகண்டியில் வெளிப்படும்.

விஜய்வசந்த் - நிகிஷா பட்டேல் நடிக்கும் சிகண்டி!

படம் பார்க்கிற ஒவொருவரும் படத்தில் எதோ ஒரு சம்பவத்தில் தன்னை தொடர்பு படுத்தி பார்க்க முடியும். படப்பிடிப்பு விரைவில் துவங்கி படம் மே மாதம் வெளியாக உள்ளது.

"என்னமோ நடக்குது" படத்தை போலவே " சிகண்டி " படத்தையும் அதிக பொருட்செலவில் டிரிபிள் வி ரெகார்ட்ஸ் பட நிறுவனம் சார்பாக வி.வினோத்குமார் தயாரிக்கிறார்," என்றார்.

விஜய் வசந்தின் சகோதரர்தான் இந்த வினோத்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment