இயக்குநர் ருத்ரய்யா மறைவுக்கு தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ரீப்ரியா.
ருத்ரய்யா இயக்கிய அவள் அப்படித்தான் படத்தின் முற்போக்குப் பெண்ணாக நடித்திருந்தவர் ஸ்ரீப்ரியா. இந்தப் படம் மூலம் ஸ்ரீப்ரியாவுக்கு மிகப் பெரிய புகழும் அங்கீகாரமும் கிடைத்தன.
ஸ்ரீப்ரியா வெளிநாட்டில் இருப்பதால் ருத்ரய்யா இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே அவர் ருத்ரய்யாவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "அவள் அப்படித்தான் எனும் மிகச் சிறந்த படத்தைத் தந்த ருத்ரய்யா மறைவு மிகவும் துரதிருஷ்டவசமானது. மிகப் பெரிய இழப்பு. அவள் அப்படித்தான் படம் எனக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கும் மிகச் சிறந்த படமாக அமைந்தது.
நான் வெளிநாட்டில் இருப்பதால், அவரது அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சார்.. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment