அட அதுக்குள்ள படத்தை முடிச்சிட்டாரா மணிரத்னம்!!

|

கடல் படத்தின் தோல்விக்குப் பிறகு ஏராளமான கதைகளைப் பரிசீலித்து வந்த மணிரத்னம், கடைசியில் சத்தமின்றி ஒரு படத்தை ஆரம்பித்தார்.

அதில் துல்கர் சல்மான், நித்யா மேனன்தான் நாயகன் - நாயகி. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

அட அதுக்குள்ள படத்தை முடிச்சிட்டாரா மணிரத்னம்!!

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'நாயகன்', 'அக்னி நட்சத்திரம்' ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பி.சி.ஸ்ரீராம் மீண்டும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

இப்போதுதான் ஆரம்பித்தது போலிருந்த இந்தப் படம், இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டதாக ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தெரிவித்தார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடவிருக்கிறார் மணிரத்னம். இந்த அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே படம் வந்துவிடும் என்கிறார்கள்.

 

Post a Comment