மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் மற்றும் அவரது மனைவி சூசன்னேவிற்கு விவாகரத்து கிடைத்துள்ளது. இதன் மூலம் அவர்கள் நிரந்தரமாக பிரிந்துள்ளனர்.
மும்பையில் உள்ள பந்த்ரா குடும்பநல நீதிமன்றம் இவர்களின் விவாகரத்தினை உறுதி செய்தது. அதேசமயம் அவர்களின் இரண்டு குழந்தைகள் யாருடைய பராமரிப்பின் கீழ் வளர்வார்கள் என்று நீதிமன்றம் உத்தரவிடவில்லை.
ஹிருத்திக் ரோசன் தான் சிறுவயதில் இருந்தே காதலித்த சூசன்னேவை 2000மாவது ஆண்டு கைபிடித்தார் 13 ஆண்டுகால திருமண வாழ்வின் சாட்சியாக இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த ஆண்டு இந்த தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த வாழ்ந்தனர். பின்னர் மும்பை பாந்தரா பகுதியில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் இருவரும் தனித்தனியாக விவாகரத்து மனு தாக்கல் செய்தனர். இருவரும் மனமொத்து பிரிவதாக அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டனர்.
இந்த விவாகரத்துக்கு சம்மதிக்க தனக்கு ஹிருத்திக் ரோஷன் ரூ.400 கோடி ஜீவனாம்சம் தர வேண்டும் என்று சூசன்னே கேட்டார். அந்த தொகையை ஹிருத்திக் ரோஷனும் கொடுக்க சம்மதித்தாக கூறப்பட்டது.
இந்த விவகாரத்தில் ஜீவனாம்சம் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தின. பின்னர், இந்த செய்திகள் வெறும் வதந்தி என்றும், தனது மனைவியை எப்போதும் நேசிப்பதாகவும், பணம் தொடர்பாக கருத்து வேறுபாடு இல்லை என்று அவர் விளக்கம் அளித்திருந்தார்.
சூசன்னே தரப்பிலும், அவர் தனது துறையில் பணிபுரிந்து, தனி மனிதராக தனது நிதி தேவைகளை தானே பூர்த்தி செய்யும் அளவில் தான் இருக்கிறார். இருவருக்கும் நிதி தொடர்பான பிரச்சினைகள் எதுவும் இல்லை என்று கூறப்பட்டது.
ஹிருத்திக் ரோஷனுக்கு மொத்தம் ரூ.1500 கோடி சொத்துக்கள் உள்ளன. ஜுகு கடற்கரையில் ஹிருத்திக் பெயரில் பிரம்மாண்ட பங்களா வீடு உள்ளது. பெங்களூரில் 100 ஏக்கர் நிலம் உள்ளது. ஆந்தேரியில் நான்கு மாடி கட்டிடம் உள்ளது. சிங்கப்பூரில் ஒரு வீடு இருக்கிறது. இந்த வீடு சூசன்னே பெயரில் இருக்கிறது.
பல வாரகாலமாக நடைபெற்ற இவர்களின் விவாகரத்து வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஹிருத்திக் ரோஷன் - சூசன்னே தம்பதிக்கு பந்த்ரா குடும்ப நல நிதிமன்றம். நேற்றைய தினம் விவகாரத்து வழங்கியது அதேசமயம் இரண்டு குழந்தைகளையும் யார் வளர்ப்பது என்பது பற்றி இன்னும் சில தினங்களில் தீர்ப்பு அளிக்கப்படும்
பாலிவுட் உலகின் மிகவும் பிரபலமான ரொமான்ஸ் ஜோடியான ஹிருத்திக் - சூசன்னே பிரிவு அவர்களின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Post a Comment