டாக்டரா, தொழில் அதிபரா?: நடிகைக்காக காத்திருக்கும் மாப்பிள்ளைகள்

|

சென்னை: உயர்ந்த நடிகைக்கு அவர் உயரத்திற்கேற்ற படித்த மாப்பிள்ளைகளை பார்த்து வைத்துள்ளார்களாம் குடும்பத்தார்.

உயர்ந்த நடிகைக்கு வயதாவதால் விரைவில் அவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு தான் மறுவேலை என்று உள்ளனர் அவரது குடும்பத்தினர். அம்மணியோ தான் ஒப்புக் கொண்ட படங்களை நடித்து முடித்துக் கொடுத்த பிறகே மணமேடை ஏறுவேன் என்கிறார்.

நீ பாட்டுக்கு படங்களில் நடித்துக் கொண்டிரு அந்த சமயத்தில் நாங்கள் மாப்பிள்ளையை தேடுகிறோம் என்றனர் குடும்பத்தார். அவர்கள் நடிகையின் உயரத்திற்கேற்ற உசரமான மாப்பிள்ளைகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். நடிகைக்கு தொழில் அதிபர், டாக்டர், என்ஜினியர் மாப்பிள்ளைகளை பார்த்து வைத்துள்ளார்களாம். அம்மணி பார்த்து அவர்களில் யாரையாவது ஒருவரை தேர்வு செய்ய வேண்டியது தான் பாக்கி.

நடிகை தற்போது தமிழில் இரண்டு படங்களிலும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். அவர் மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்தனை படங்களையும் முடித்த பிறகே அவருக்கு டும் டும் டும்.

 

Post a Comment