ரஜினியின் லிங்கா முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கு!

|

சென்னை: ரஜினியின் லிங்கா படத்தின் முதல் காட்சி இன்று நள்ளிரவு, அதாவது படம் வெளியாகும் வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு திரையிடப்படுகிறது.

சென்னையில் காசி திரையரங்கில் நள்ளிரவு 1 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது. இதில் கேஎஸ் ரவிக்குமார் மற்றும் அவரது குழுவினர் மட்டுமே 350 பேர் பார்க்கிறார்கள். நடிகர்கள் பலரும் இந்த காட்சிக்கு வரவிருக்கிறார்கள்.

ரஜினி மனைவி லதா, மகள்கள் ஆகியோரும்கூட இந்த காட்சிக்கு வரக்கூடும் என்கிறார்கள்.

ரஜினியின் லிங்கா முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கு!

சைதை ராஜ் தியேட்டரிலும் நள்ளிரவுக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பெருமளவிலான டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்கியுள்ளனர். இந்த இரு தியேட்டர்களிலும் ரஜினி பிறந்த நாளுக்கு கேக் வெட்டி, வாண வேடிக்கை நடத்தி காட்சிகளை ஆரம்பிக்க உள்ளனர். இந்த கொண்டாட்டங்களில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரும் பங்கேற்கிறார்.

புறநகர் பகுதிகளிலும் பல அரங்குகளில் நள்ளிரவுக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். சென்னைக்கு வெளியே உள்ள பல நகரங்களிலும் நள்ளிரவுக் காட்சி நடைபெறுகிறது. ரசிகர்கள் இந்தக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கியுள்ளனர். விலை சராசரியாக ரூ 500. சில அரங்குகளில் இது ரூ 1000 வரை போயுள்ளது.

காசி, ராஜ், எஸ்எஸ்ஆர் பங்கஜம், தேவி கருமாரி, வில்லிவாக்கம் ஏஜிஎஸ், குரோம்பேட்டை வெற்றி, தாம்பரம் வித்யா உள்ளிட்ட அரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு லிங்கா சிறப்புக் காட்சிகள் திரையிடப்படுகின்றன.

மாயாஜால், ஓஎம்ஆர் ஏஜிஎஸ் அரங்குகளில் காலை 7 மணிக்கு முதல் காட்சி தொடங்குகிறது.

வெளிநாடுகளில்...

தமிழகத்துக்கு இணையாக வெளிநாடுகளிலும் ஒரு நாள் முன்னதாகவே லிங்கா திரையிடப்படுகிறது. வளைகுடா நாடுகளில் இன்று மாலையே சிறப்புக் காட்சி தொடங்குகிறது.

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் தமிழகத்துக்கு நிகரான கொண்டாட்டங்களுடன் முதல் நாள் முதல் காட்சி நடக்கிறது.

 

Post a Comment