ஜெய்ஹிந்த் 2 வெற்றி: திருப்பதிக்கு பாதையாத்திரை சென்ற அர்ஜூன்

|

சென்னை: நடிகர் அர்ஜுன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதையாத்திரையாக சென்று சாமி கும்பிட்டார்.

ஜெய்ஹிந்த்-2 படம் ரிலீஸ் ஆவதற்கு முன் அர்ஜுன் திருமலை வந்து பிரார்த்தனை செய்தார். இந்த படம் வெளியாகி வெற்றி பெற்றதை அடுத்து நடிகர் அர்ஜூன் வியாழக்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வந்தார். அலிபிரி மலைப்பாதை வழியாக திருமலைக்கு மனைவி, மகளுடன் பாதயாத்திரையாக சென்ற அர்ஜூன், நேற்று காலை அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

ஜெய்ஹிந்த் 2 வெற்றி: திருப்பதிக்கு பாதையாத்திரை சென்ற அர்ஜூன்

பின்னர் ஆஞ்சநேயர் சன்னதியில் தியானம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன், தனது ‘ஜெய்ஹிந்த்-2' படம் வெற்றி அடைந்ததை முன்னிட்டு அவர் ஏழுமலையானை தரிசனம் செய்ததாக அவர் கூறினார்.

படம் ரீலீஸ் ஆவதற்கு முன்பு திருப்பதி வந்து சென்றதாக கூறிய அவர், இப்போது படம் வெற்றி அடைந்ததால் வேண்டுதலின் பேரில் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்துள்ளார்.

 

+ comments + 1 comments

Anonymous
7 December 2014 at 09:17

Jai hind padam vetri ya?

Post a Comment