மூவிஃபண்டிங் ‘ என்றொரு மூடுமந்திரம் - 2

|

-இயக்குநர் முத்துராமலிங்கன்

'மூவிஃபண்டிங்' என்னும் கிரவுட் ஃபண்டிங் குறித்து இயக்குநர் ஜெய்லானி சொல்வதற்கு முன்பு நான் எதுவுமே கேள்விப்பட்டிராதது ஒரு தற்செயல்தான்.

'முதல்ல எனக்குப் புரியிறமாதிரி சொல்லுங்க சார். அப்புறம் இது சாத்தியமான்னு யோசிக்கலாம் ' என்றேன்.

'வெளிநாடுகள்ல ரொம்ப சாதாரணமா நடக்குறதுதான் இது. அதுக்கான வெப்சைட்டுகள் ஏராளம் இருந்தாலும்

'அவருக்குத் தெரியாம இவரு...இவருக்குத் தெரியாம அவரு...' - இயக்குநர் முத்துராமலிங்கன்

www.kickstarter.com, indiegogo.com இந்த ரெண்டு சைட்டுகளும் கொஞ்சம் பிரபலம்.

இதுக்குன்னே இருக்குற, இந்த மாதிரியான வெப்சைட்டுகள்ல தன்னைப்பற்றிய விபரங்கள், தான் எடுக்கப்போகும் படம், கதை, பட்ஜெட், போன்ற விபரங்களை லிஸ்ட் பண்ணிட்டு, குறிப்பிட்ட கால அவகாசம் அறிவிச்சி காத்திருப்பாங்க. அதனோட தாக்கம் எந்த அளவுக்கு இருக்கோ அந்த அளவுக்கு அதுக்கு பண சப்போர்ட் வந்து சேரும். இது படங்களுக்கு மட்டும்னு இல்லை. குறும்படம், டாகுமெண்டரி, ஃபோட்டோகிராஃபி, சுயதொழில், பெயிண்டிங் இப்பிடி சகல சங்கதிகளுக்கும் சப்போர்ட் கேட்டு லிஸ்ட் பண்ணுவாங்க.

அதுல சில சாம்பிள் பாருங்க... ஒருத்தர் நான் உலகம் முழுக்க சுத்தி அன்னை தெரசா படங்களை கலெக்ட் பண்ணப் போறேன். அதுக்கு இவ்வளவு பட்ஜெட் ஆகும். பத்துநாள்ல கிளம்பனும் ஃப்ரண்ட்ஸ் சப்போர்ட் மி'ன்னு லிஸ்ட் பண்ணுவார்.

'அவருக்குத் தெரியாம இவரு...இவருக்குத் தெரியாம அவரு...' - இயக்குநர் முத்துராமலிங்கன்

இன்னொருத்தர் ‘குடிகார கோமகன்களைப் பத்தி ஒரு டாகுமெண்டரி. கேமரா வாங்க, அவங்ககூட அல்லல்பட, நானும் கொஞ்சம் கூடசேர்ந்து குடிக்கன்னு இவ்வளவு பட்ஜெட் ஆகும்னு லிஸ்ட் பண்ணுவார்.

சமீபத்துல நான் பார்த்த இண்ட்ரண்டிஸ்டிங்கான லிஸ்டிங் இது. பாண்டிச்சேரியில செட்டிலான வெளிநாட்டுப்பொண்ணு. ஒரு ப்ளாக்கர் அவ. ‘நான் இந்தியா முழுக்க அலைஞ்சி திரிஞ்சி என் கிட்ட மாட்டுற அத்தனை வித்தியாசமான இந்திய முகங்களையும் ‘க்ளோசப்-அப்' எடுத்து புகைப்படங்களா கலெக்ட் பண்ணப்போறேன். அதுக்கு கேமரா வாங்க, டிராவல் செலவு, சாப்பாட்டுச் செலவுன்னு இவ்வளவு ஆகுதுன்னு லிஸ்ட் பண்ணியிருந்தா.

[நம்ம இந்திய முகங்களை க்ளோசப்-அப்ல பாக்குற துணிச்சல், அதுவும் ஒரு வெளிநாட்டுப்பொண்ணுக்கு... பாக்க பாவமாயிருந்தது]

'வெளிநாட்டுக் கதைகளை விடுங்க. நம்ம நாட்டுல, குறிப்பா நம்ம கோடம்பாக்கத்துல இப்பிடி எதுவும் நடந்ததா தெரியலையே?'

'அப்படி சுத்தமா நடக்கலைன்னு சொல்லமுடியாது. சில சில முயற்சிகள் நடந்திருக்கு. ஜீ.வி.முயற்சி பண்ணினார். சரியா ஒர்க்-அவுட் ஆகலை. சேரன் ‘பச்சை மனிதன்'னு ஒரு முயற்சி பண்ணினார். அவர் நினைச்ச பணம் வசூலாகலை. அப்பிடி வசூலான பணத்தை ரீஃபண்ட் பண்ணுனதுல அப்ப ஏகப்பட்ட குழப்பங்கள் நடந்துச்சி.

அப்புறம் சமீபத்துல வந்த ‘குறையொன்றுமில்லை' கூட கிரவுட் ஃபண்டிங்கில் உருவான படம்தான். டைட்டில்ல தயாரிப்பாளர்கள்னு ஒரு அம்பத்திச்சொச்சம் பேரோட பெயர் போட்டாங்க.

'அவருக்குத் தெரியாம இவரு...இவருக்குத் தெரியாம அவரு...' - இயக்குநர் முத்துராமலிங்கன்

இந்த மாதிரியான முயற்சிகள்ல வெற்றியும் நல்ல கவனிப்பையும் பெற்ற படங்கள்னா இந்தியில வந்த ‘முனிர்' கன்னடத்துல பவன்குமார் இயக்கத்துல வந்த ‘லூஸியா' ஆகிய ரெண்டு படங்களைச் சொல்லலாம்'.

இதுபோல் இன்னும் பத்து மடங்கு தகவல்களை ஜெய்லானி சொல்லி முடித்தபோது, மிகத் தெளிவாக குழம்பிவிட்டேன்.

'வெள்நாட்டுல இது சாத்தியமா இருக்கலாம். நம்ம ஊர்ல இது நடக்கும்னு எனக்கு நம்பிக்கை இல்லை சார். ஃபேஸ்புக்குல ஒரு நல்ல ஸ்டேட்டஸ் போட்டா, சும்மா போற போக்குல, வலிக்காம ஒரு ‘லைக்' போடக்கூட ‘இது நம்ம ஆளா'ன்னு பாக்குற கூட்டம் இது' என்றேன்.

‘நீங்க சொல்ற கருத்தை நான் நூறு சதவிகிதம் ஒத்துக்கிறேன். ஆனா நாம பாக்குற 200 தமிழ்ப் படங்கள்ல நூறு படம் கிரவுட் ஃபண்டிங்லதான நடக்குது?' என்றார்.

‘ஆனா வெளிய அறிவிக்காம நடக்குது' அவரே தொடர்ந்தார்....டைரக்டர் கையில கொஞ்சூண்டு காசை வச்சிக்கிட்டு ‘பசையுள்ள' ஒரு புதுமுக ஹீரோவைப் புடிக்கிறார். அவர் ‘காளை'யாயிருந்தாலும் கூட முடிஞ்ச வரைக்கும் 'கறக்குறது'. ஒரு வாரம் ஷூட்டிங் போனப்புறம், ஷூட்டிங் நடக்கிற ஏரியாக்கள்ல, வேடிக்கை பாக்க வர்ற ரெண்டு முதலாளிங்களை நடிக்க வச்சி உள்ள இறக்குறது. அடுத்து அந்த ஊர் ரியல் எஸ்டேட் திடீர் பணக்காரங்க ரெண்டு பேர் வில்லனா எண்ட்ரி குடுப்பாங்க. படம் முடியிற ஸ்டேஜ்ல இவருக்குத் தெரியாம அவரு, அவருக்குத்தெரியாம இவரு, இவிங்க ரெண்டு பேருக்குமே தெரியாம இன்னும் ஒரு நாலு பேருன்னு அது ஒரு கிரவுட் ஃபண்டிங் படமா மாறியிருக்கும்.

‘இப்ப சொல்லுங்க தமிழ்ல இது மாதிரி வருஷத்துக்கு பாதி 'கிரவுட் ஃபண்டிங்' படங்கள்தான வருது?'

‘ம்ம் நீங்க சொல்றது சரிதான். யாரோட கழுத்தை அறுத்தாவது படம் பண்ணிக்கிட்டே இருப்பேன்ங்கிற பார்ட்டிகளை விட இவிங்க கொஞ்சம் பெட்டரு. ஆனா இது ஒரு மாதிரி டகால்டி வேலை தெரிஞ்ச ஆளுகளுக்குத்தான ஒத்து வரும்? நாமதான் டம்மி பீஸுங்களாச்சே??'.

‘எதுவும் சும்மா வராது சார். இப்ப நாம ப்ளான் பண்றது நாம ரெண்டு பேரு மட்டும் படம் பண்றதுக்கு இல்லை. நல்ல படங்கள் பண்ணிட்டு அடுத்த படம் கிடைக்காத சில இயக்குநர்களைத் தொடர்ந்து லிஸ்ட் பண்ணுவோம். பாருங்க கொஞ்ச நாளைக்கு முந்தி இறந்து போனாரே ருத்ரையா ‘அவள் அப்படித்தான்' மாதிரி ஒரு காவியத்தைப் படைச்சிட்டு 35 வருஷமா அடுத்த படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்காம அல்லாடியிருக்கார். அவர் செத்ததும் ஒரே தினசரியில ஏழெட்டு இரங்கல் கட்டுரை போடுறாங்க. அவர்லாம் கிரவுட் ஃபண்டிங்ல ட்ரை பண்ணியிருந்தார்னா எத்தனை ஆயிரம் பேர் இன்வெஸ்ட் பண்னியிருப்பாங்க.... அவ்வளவு ஏன், கடந்த அஞ்சாறு வருஷ பட்டியலைப்பார்த்தாலே ‘ஆரண்ய காண்டம்' மாதிரி அட்டகாசமான படத்தைக்குடுத்து அடுத்த படம் கிடைக்காம திண்டாடுற தியாகராஜன் குமாரராஜாக்களே ஒரு ஆறு ஏழுபேர் தேறுவாங்க. நல்ல ஐடியா ரொம்ப யோசிக்காதீங்க. ட்ரை பண்ணித்தான் பாப்போமே?'

‘நம்ம ஆளுங்க 'செத்தா' நல்லா செய்வாங்க. ஆனா உயிரோடு இருக்கப்ப பச்சைத்தண்ணி கூட தரமாட்டாங்க'.

தொடர்ந்து நான் நெகடிவ்வாகவே பேச கோபமாய் அலுவலகத்தை விட்டு எழுந்துபோனார் ஜெய்லானி

(நாளை மறுநாள் தொடர்வேன்...)

தொடர்புக்கு: muthuramalingam30@gmail.com

 

Post a Comment