இயக்குநர் கே பாலச்சந்தர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் ஆமீர்கான்.
நேற்று முன்தினம் மரணமடைந்த பாலச்சந்தரின் உடல், நேற்று தகனம் செய்யப்பட்டது. அவர் மரணத்துக்கு ஆமீர்கான் விடுத்துள்ள இரங்கல் செய்தி:
'கே.பாலச்சந்தர் அவர்களின் மறைவு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கும் பேரிழப்பு. சினிமா துறைக்கு அவர் ஆற்றியுள்ள சேவை மகத்தானது. என்னிடம் அவர் காட்டிய பெருந்தன்மையும், அரவணைப்பும் என்றும் என் நினைவில் நீங்காமல் நிலைத்திருக்கும்.
மிகுந்த பணிவு கொண்ட பெரியவர் அவர். என்னுடைய 25 வருட சினிமா வாழ்வில் அவருடன் கலந்துரையாடிய மாலை பொழுதை என்றும் என்னால் மறக்க இயலாது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்,' என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment