சென்னை: இயக்குநர் ப்ரியதர்ஷனும் நடிகை லிஸியும் பரஸ்பர விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.
தமிழில் லேசா லேசா, சினேகிதியே, பிரியாத வரம் வேண்டும், சிறைச்சாலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட படங்களையும், மலையாளம் இந்தியில் ஏராளமான படங்களையும் இயக்கியவர் ப்ரியதர்ஷன். விக்ரம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் லிஸ்ஸி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றது. பின்னர் நண்பர்களின் சமாதானம் காரணமாக மீண்டும் சேர்ந்து வாழ்ந்தனர்.
இப்போது மீண்டும் விவாகரத்து செய்ய முடிவு செய்து, நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துவிட்டனர்.
இதுகுறித்து நடிகை லிஸ்ஸி வெளியிட்டுள்ள அறிக்கை:
24 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு நானும் பிரியதர்ஷன் அவர்களும் முழு மனதுடன் பிரிய முடிவெடுத்துள்ளோம் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் பிரிவை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்த இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி விண்ணப்பித்துள்ளேன். எங்களது இந்த முடிவை எங்களின் குழந்தைகளும், நண்பர்களூம் அறிவார்கள்.
இந்த கடினமான காலத்தில் தாங்கள் அனைவரும் எங்களின் கவலை அறிந்து, எங்களின் தனியுரிமை மதித்து செயல்படமாறு பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்.
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Post a Comment