திகிலும் நகைச்சுவையும் கலந்து கட்டி வரும் சவரிக்காடு!

|

சூரி மற்றும் ரோபோ சங்கர் இருவரின் காமெடியில் உருவாகி வரும் படம் ‘திகிலும் நகைச்சுவையும் கலந்து கட்டி வரும் சவரிக்காடு!   

இப்படத்தை அன்னை தெரசா பிலிம்ஸ் சார்பாக எம்.என்.கிருஷ்ணகுமார் தயாரித்து இயக்கி வருகிறார்.

படத்தைப் பற்றி எம்.என்.கிருஷ்ணகுமார் கூறும்போது, "இந்த படத்தின் ஆரம்பம் சூரி மற்றும் ரோபோ சங்கர் இருவரின் காமெடியில் கலகலப்பாக செல்லும். பின் பாரஸ்ட் ரேஞ்சராக சண்முகராஜன் வந்தபிறகு படம் திரில்லராக செல்லும். சவரிக்காட்டிற்குள் நடக்கும் கதை தான் இது.

இந்த சவரிக்காட்டோட ரகசியங்களை தெருஞ்சுகிட்ட யாரும் இந்த காட்ட விட்டு உயிரோட வெளிய போக முடியாது என்பது மாதிரியான திரைக்கதை அமைத்திருக்கிறோம். இந்த சவரிக் காட்டிற்குள் நடக்கும் திரில் சம்பவங்கள், ரசிகர்கள் ரசிக்கும் விதமாக இருக்கும்.

கொடைக்கானல், பழனி, திண்டுக்கல், உடுமலை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது," என்றார்.

 

Post a Comment