மணிரத்னம் படம் மூலம் பெரிய திரைக்கு வரும் டிவி தொகுப்பாளினி ரம்யா!

|

பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் விஜய் டிவி ரம்யா முதல் முதலாக சினிமாவில் நடிக்கிறார். மணி ரத்னம் இயக்கும் புதிய படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், சினிமா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவராகவும் உள்ளார் ரம்யா.

மணிரத்னம் படம் மூலம் பெரிய திரைக்கு வரும் டிவி தொகுப்பாளினி ரம்யா!

இதுவரை தொலைக்காட்சிகளில் மட்டுமே தோன்றி வந்த இவர் ஓகே கண்மணி என்ற தற்காலிகப் பெயர் கொண்ட படத்தில் நடிக்கிறார். இதனை மணிரத்னம் இயக்குகிறார்.

துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிக்கும் இந்தப் படம் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இதில் கதாநாயகியுடன் வரும் வேடத்தில் ரம்யா நடிக்கிறார். இதற்காக டெல்லியில் முகாமிட்டு நடித்து வருகிறார் ரம்யா.

இதற்கு முன் மொழி படத்தில் ஒரு காட்சியில் வந்து போனார் ரம்யா.

 

Post a Comment