என்னை ஒரு மகனாகவே பார்த்துக் கொண்டவர் கே பாலச்சந்தர் - ரஜினிகாந்த்

|

சென்னை: என்னை தன்னுடைய மகனாகவே பார்த்துக் கொண்டவர் கே பாலச்சந்தர். அவர் மறைவு, என்னையே நான் இழந்ததைப் போல இருக்கிறது, என்றார் நடிகர் ரஜினிகாந்த்.

இந்திய சினிமாவுக்கு ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டாரைத் தந்தவர் கே பாலச்சந்தர். 1975-ல் அபூர்வ ராகங்கள் படத்தில் இரண்டாவது நாயகனாக ரஜினியை அறிமுகம் செய்தார்.

அதன்பிறகு ரஜினிகாந்த் என்பவர் இந்திய சினிமாவின் ஆளுமையாக மாறிப் போனது தனி வரலாறு.

என்னை ஒரு மகனாகவே பார்த்துக் கொண்டவர் கே பாலச்சந்தர் - ரஜினிகாந்த்

பாலச்சந்தர் மீது அளவுக்கு அதிகமான மரியாதை பாசம் வைத்திருந்தார் ரஜினி. எந்த மேடை, நேர்காணல் என்றாலும் பாலச்சந்தரின் பெயரைக் குறிப்பிட மறந்ததில்லை ரஜினி.

தனது குருநாதர் உடல்நலம் குன்றியிருந்தபோது நேரில் போய் பார்த்துவிட்டு வந்தார் ரஜினி. மீண்டும் அவர் உடல்நலம் பெற்று வந்துவிடுவார் என நம்பினார் அவர்.

நேற்று பாலச்சந்தர் மறைந்த செய்து கேட்டு அதிர்ச்சியடைந்த ரஜினி, உடனடியாக அவர் வீட்டுக்குப் போய் தனது மரியாதையைச் செலுத்தினார்.

என்னை ஒரு மகனாகவே பார்த்துக் கொண்டவர் கே பாலச்சந்தர் - ரஜினிகாந்த்

ருத்துவமனையிலிருந்து மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு பாலசந்தரின் உடல் செவ்வாய்க்கிழமை இரவு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

வெகுநேரம் பாலசந்தரின் உடலுக்கு அருகே அமைதியாக அமர்ந்திருந்தார்.

பின்னர், 10.30 மணியளவில் வெளியில் காத்திருந்த செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் பேசியதாவது: இயக்குநர் பாலசந்தர் எனது குரு மட்டுமல்ல. எனக்கு தகப்பன் போன்றவர். என்னை அவர் நடிகனாகப் பார்க்கவில்லை. மகனாகப் பார்த்தார். அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று. என்னை நானே இழந்து விட்டதாக உணர வைத்து விட்டது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்," என்றார்.

 

Post a Comment