பெரிய திரையில் வாகை சூடவா, மவுன குரு படங்களுக்குப் பிறகு பெரிய ஹீரோயினாக வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட இனியா, குறுகிய காலத்திலேயே வில்லியாகி இப்போது டிவிக்கும் வந்துவிட்டார். கூடவே நடிகர் அருண் விஜய்யும்.
இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக, ஒரே உருவத்தில் இருக்கும் இரட்டையர்கள் மட்டுமே பங்குபெறும் ரியாலிட்டி ஷோவான இருவர் என்ற நிகழ்ச்சியின் நடுவர்களாக இந்த இருவரும் பங்கேற்கின்றனர்.
ஜெகன், மைதிலி இருவரும் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், இரட்டையர்களிடம் இருக்கும் நடனத் திறமை, பாடும் திறன், நகைச்சுவை போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையில் சுவாரசியமான போட்டிகள் நடத்தப்படுகின்றன. அத்துடன், பொது அறிவு கேள்விகளும் கேட்கப்படுகின்றன.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு வேந்தர் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதன் மறுஒளிபரப்பை ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு காணலாம்.
Post a Comment