விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் நடிகைகள் தொடர்ந்து அவர்களின் புகழ் பாடுவது வழக்கமான விஷயம்.
தெலுங்கு சினிமாக்காரர்கள் இணைந்து ஹூட் ஹூட் புயல் பாதிப்புக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியொன்ற சமீபத்தில் நடத்தினர். இதில், ராம் சரண், சமந்தா, காஜல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதில் சமந்தாவிடம் விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சமந்தா பதில் அளித்தார்.
அவர் கூறுகையில், ''விஜய் மிகவும் அமைதியானவர்; அதிகம் பேச மாட்டார். 'ஷாட் ரெடி' என்று கூறும் வரை அமைதியாக இருப்பார்.
'ஷாட் ரெடி' என சொன்னால் போதும். அடுத்த நொடியே அவருக்குள் அப்படி ஒரு சக்தி வந்துவிடும். ஒவ்வொரு ஷாட்டிலும் சுற்றி இருப்பவர்களுக்கு ஆச்சர்யம் கொடுப்பார்.
அந்த வகையில் விஜய் ஒரு ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி ஹீரோ என்றுதான் சொல்ல வேண்டும்," என்றார்.
Post a Comment