கே பாலச்சந்தர் வீட்டுக்குப் போய் துக்கம் விசாரித்த கமல் ஹாஸன்!

|

சென்னை: தன் குருநாதர் கே பாலச்சந்தர் வீட்டுக்குப் போய், அவரது இறப்புக்கு துக்கம் விசாரித்தார் நடிகர் கமல் ஹாஸன்.

ரஜினிகாந்த் - கமல் ஹாஸன் ஆகிய இரு பெரும் சிகரங்களை உருவாக்கிய, தமிழ் சினிமாவின் சாதனை இயக்குநர் பாலச்சந்தர் கடந்த டிசம்பர் 23-ம் தேதி சென்னையில் காலமானார்.

கே பாலச்சந்தர் வீட்டுக்குப் போய் துக்கம் விசாரித்த கமல் ஹாஸன்!

அவரது மறைவின்போது கமல் ஹாஸன் சென்னையில் இல்லை. உத்தம வில்லன் பட வேலைகளுக்காக அமெரிக்காவின் லாஜ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றிருந்தார். பாலச்சந்தர் உடலை எரியூட்டுவதற்கு முன் அவரால் நாடு திரும்ப முடியவில்லை.

கே பாலச்சந்தர் வீட்டுக்குப் போய் துக்கம் விசாரித்த கமல் ஹாஸன்!

நேற்று இரவுதான் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார் கமல்.

இன்று காலை மயிலாப்பூரில் உள்ள பாலச்சந்தர் வீட்டுக்குச் சென்றார். அங்கு பாலச்சந்தர் குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்தார். அவர் உருவப் படத்துக்கு மலர் அஞ்சலியும் செலுத்தினார்.

 

Post a Comment