சென்னை: நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதிக்காக கதை ஒன்றைத் தயார் செய்து வைத்துள்ளாராம் காமெடி நடிகர் சந்தானம். உதயநிதியின் கால்ஷீட் கிடைத்ததும், இது குறித்து அதிகாரப்பூர்வமாக சந்தானம் அறிவிப்பாராம்.
உதயநிதி ஸ்டாலின் நாயகனாக அறிமுகமான முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திலிருந்தே அவருடன் இணைந்து நடித்து வருகிறார் சந்தானம். இருவரும் சேர்ந்து அடிக்கும் காமெடி லூட்டிகளுக்கென ரசிகர் பட்டாளமே உள்ளது.
தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஜெகதீஷ் இயக்கத்தில் நண்பேண்டா படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். அதில், அவர் நடிகர் சந்தானம் தனக்காக கதை ஒன்றைத் தயார் செய்து வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது கைவசம் உள்ள படங்களை எல்லாம் முடித்து விட்டு, சந்தானத்திடம் கதை கேட்பதாக உறுதி அளித்துள்ளாராம் உதயநிதி.
உதயநிதியின் அடுத்தபடமான இதயம் முரளியில் சந்தானம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment