ஷங்கர் இயக்கத்தில் பெரும் செலவில் உருவாகியிருக்கும் ஐ திரைப்படம் இன்று முதல் உலகெங்கும் வெளியாகிறது.
விக்ரம் -எமி ஜாக்ஸன் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் உருவாகி வந்த படம் ஐ. வெளியீட்டுத் தேதிகள் பலமுறை தள்ளிப் போயின இந்தப் படத்துக்கு.
ஒரு வழியாக பொங்கலுக்கு படத்தை வெளியிடுகின்றனர். இந்தப் படத்துக்கு தணிக்கைத் துறையில் யு ஏ சான்றுதான் வழங்கினர்.
யு சான்று பெற மிகவும் போராடியும் கிடைக்காததால், யு ஏ உடனேயே படத்தை வெளியிடுகின்றனர்.
தமிழகத்தில் 400 அரங்குகளுக்கும் மேல் இந்தப் படம் வெளியாகிறது. உலகெங்கும் இந்தப் படத்துக்கு 2500 அரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. சீனாவில் மட்டும் சில தினங்கள் கழித்து படத்தை வெளியிடப் போகிறார்களாம். படம் ரூ 1000 கோடி வசூலைக் குவிக்கும் என தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் பெரும்பாலான அரங்குகளில் ஐ படம்தான் திரையிடப்பட்டுள்ளது.
மூன்று மணி 9 நிமிடங்கள் ஓடக் கூடிய ஐ படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment