300-க்கும் அதிகமான அரங்குகளில் இசை... ஜனவரி 30-ம் தேதி வெளியாகிறது!

|

அஜீத், விஜய் இருவருக்குமே புதிய திருப்பத்தைத் தந்தவர் எஸ் ஜே சூர்யா. ஒரு கட்டத்தில் தானே இயக்கி ஹீரோவாக நடிக்கத் தொடங்கி, அதில் வெற்றியும் ருசித்துவிட்டார்.

ஆனால் அவர் படம் வெளியாகி கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இத்தனை காலமாக அவர் இயக்கி நடித்து வந்த படம் இசை. இந்தப் படம் ஒரு வழியாக வரும் ஜனவரி 30ம் தேதி வெளியாகிறது.

300-க்கும் அதிகமான அரங்குகளில் இசை... ஜனவரி 30-ம் தேதி வெளியாகிறது!

இந்தப் படத்துக்கு உலகெங்கும் 300க்கும் அதிகமான அரங்குகள் கிடைத்துள்ளன.

இரு இசை அமைப்பாளர்களுக்கு இடையிலான மோதல்தான் கதை என்கிறார்கள். இதனை படத்தின் ட்ரைலரும் உறுதிப்படுத்துகிறது.

படத்துக்கு இசை எஸ் ஜே சூர்யாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment