அஜீத்தின் என்னை அறிந்தால் திரைப்படம் வரும் பிப்ரவரி 5-ம் தேதி வெளியாகும் என்று அப்படத்தை வெளிநாடுகளில் விநியோகிக்கும் உரிமை பெற்ற அய்ங்கரன் நிறுவனம் அறிவித்துள்ளது.
என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வருவதாக இருந்தது. ஆனால் பொங்கலுக்கு மூன்று படங்கள் வெளியானதால் தியேட்டர் பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும் படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் கொஞ்சம் பாக்கியிருந்ததால் தள்ளிப் போனதாகக் கூறப்பட்டது.
ஜனவரி 29-ம் தேதி படத்தை வெளியிடவிருப்பதாக தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் படம் மேலும் ஒரு வாரம் தள்ளிப் போயுள்ளது. இதனை படத்தின் வெளியீட்டாளர்களான ஈராஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான அய்ங்கரன் அறிவித்துள்ளது.
Post a Comment