ரஜினி படத்துக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானில் வெளியாகிறது ஐ

|

ஷங்கரின் ரஜினி படத்துக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானில் வெளியாகிறது ஐ  

ஆஸ்கார் பிலிம்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கியுள்ள ஐ படம் உலகம் முழுவதும் வருகிற ஜனவரி 14-ந் தேதி வெளியாகவிருக்கிறது. .

உலகின் பல்வேறு நாடுகளில் ஐ யை வெளியிடுகிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.

பாகிஸ்தானிலும் இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள். பாகிஸ்தானில் வெளியாகும் இரண்டாவது தமிழ்ப் படம் ஐதான். ரஜினி நடித்த சிவாஜிதான் அங்கு முதலில் வெளியானது. எந்திரன், பாட்ஷா போன்ற படங்கள் இந்தியில்தான் அங்கு வெளியாகின.

 

Post a Comment