குடியரசு தினத்தன்று கத்தி படம் ஒளிபரப்பாகும் என்று ஜெயாடிவியில் முன்னோட்டம் ஒளிபரப்பான நிலையில் கதை கட் செய்த தொலைக்காட்சி நிறுவனம் ‘பூவரசம்பூ பீப்பி' படத்தை ஒளிபரப்புகிறது.
கத்தி திரைப்படம் தீபாவளி தினத்தன்று ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜெயா டிவி பெற்றுள்ளது. பொங்கல் சிறப்பு திரைப்படமாக கத்தி ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பொங்கல் முடிந்த பின்னர் ஜெயா டிவியில் கத்தி படத்தின் விளம்பரம் ஒளிபரப்பினார்கள். இதனையடுத்து குடியரசு தினத்தன்று கத்தி ஒளிபரப்பகும் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக பூவரசம்பூ பீப்பி என்ற படத்தை ஒளிபரப்புகிறது ஜெயா டிவி.
கத்தியை எதிர்பார்த்த விஜய் ரசிகர்கள் இதனால் ஏமாற்றமடைந்தனர்.
Post a Comment