சென்னை: பதி நடிகர் தனது சம்பளத்தை உயர்த்தி விட்டாராம். இப்போது அவர் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறாராம்.
நட்புக்காக நண்பர்களின் படங்களில் சிறிய வேடங்களில் கூட தலை காட்டியவர் தான் இவர். ஆனால், அவரிடம் ஏன் இந்த அதிரடி மாற்றம் என அவரது நெருங்கிய வட்டாரத்தாரிடம் கேட்டால், ''குறைந்த சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தால், நிறைய பேர் வந்து கதவை தட்டுகிறார்கள். சம்பளத்தை உயர்த்தி விட்டால், கதவை தட்டுபவர்கள் எண்ணிக்கை குறைந்து விடும்'' என நடிகர் விளக்கம் கூறுகிறாராம்.
ஆனால், சிறிய படங்கள் மூலம் மக்களிடம் அதிக கவனிப்பைப் பெற்றவரான இந்த நடிகர், இவ்வாறு அதிரடியாக கோடிகளில் சம்பளத்தை உயர்த்தினால், சின்னத் தயாரிப்பாளர்கள் பலர் நடிகரை நெருங்கவே பயப்படுவார்களே... இதை ஏன் நடிகர் மறந்தார்.
Post a Comment