நடிகைகளுக்கு வெளிநாடு சென்றால்தான் அதிக தனிமையும், விரும்பியபடி வாழும் சுதந்திரமும் கிடைக்கிறது. அப்படி வரும் வாய்ப்புகளை தவறவிடுவதே இல்லை.
சமீபத்தில் நடிகை ராய் லட்சுமிக்கு துபாய் செல்லும் வாய்ப்பும் சில தினங்கள் ஓய்வும் கிடைத்தது.
துபாயில் தான் விரும்பிய பொழுதுபோக்குகளில் லயித்து ஈடுபட்டார் ராய் லட்சுமி.
வேகமான படகு சவாரி, வானத்தில் பறந்த படி ஸ்கை டைவ் அடிப்பது போன்ற சாகஸ விளையாட்டுகளில் மகிழ்ச்சியாக விளையாடினார்.
துபாயின் முக்கிய சுற்றுலாப் பகுதிகளையெல்லாம் சுற்றிப் பார்த்து, தோழிகளுடன் படமெடுத்துக் கொண்டார்.
அந்தப் புகைப்படங்களை ரசிகர்களுக்காக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, "முயன்றால் முடியாதது எதுவும் இல்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment