புலி படத்தில் விஜய்- ஸ்ருதி சொந்தக் குரலில் பாட்டு!

|

தமிழ் சினிமாவில் சொந்தக் குரலில் பாடும் நடிகர் - நடிகைகளுக்குப் பஞ்சமில்லை. விஜய்யும் ஸ்ருதிஹாஸனும் அவ்வப்பது சொந்தக் குரலில் பாடி வருபவர்கள்.

இப்போது இருவரும் முதல் முறையாக ஜோடி சேரும் புலி படத்தில் இருவருமே ஒரு பாடலை சொந்தக் குரலில் பாடப் போகிறார்களாம்.

புலி படத்தில் விஜய்- ஸ்ருதி சொந்தக் குரலில் பாட்டு!

சிம்புதேவன் இயக்கும் இந்தப் படத்தில் ஹன்சிகா இன்னொரு நாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் நடித்துள்ளனர்.

தேவிஸ்ரீபிரசாத் இசையில் இப்படத்தில் 6 பாடல்கள் இடம் பெறுகின்றன. இதில் மூன்று பாடல்களுக்கு இசையமைத்துவிட்டார். அதில் ஒரு பாடலுக்காக ஈசிஆரில் பிம்மாண்டமாக செட் அமைத்து படமாக்கியுள்ளனர். இன்னும் மூன்று பாடல்களுக்கு இசையமைக்கவுள்ளார் தேவிஸ்ரீபிரசாத். இந்த மூன்று பாடல்களில் ஒரு பாடலுக்கு விஜய்-சுருதியை பாட வைக்க முடிவு செய்திருக்கிறாராம்.

 

Post a Comment