வேலூர் : புத்தாண்டை ஒட்டி வேலூர் ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் நடிகை நமீதா வழிபாடு நடத்தினார்.
உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மக்கள் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டனர். இதற்கென நள்ளிரவு முதலே கோயில் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
புத்தாண்டோடு வைகுண்ட ஏகாதசியும் சேர்ந்து கொண்டதால் தமிழகத்தின் கோவில்களில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அந்தவகையில், வேலூரில் உள்ள ரத்திரகிரி பாலமுருகன் கோவிலில் நடிகை நமீதா வழிபாடு நடத்தினார்.
Post a Comment