இசைஞானி இளையராஜா ஒரு மகான் ஆகிவிட்டார் என்று புகழ்ந்தார் ரஜினிகாந்த்.
1000 படங்களுக்கு இசையமைத்த இளைய ராஜாவுக்கு மும்பையில் பாராட்டு விழா நடந்தது.
பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜாவுக்கு பாலா இயக்கும் ‘தாரை தப்பட்டை' படம் 1000-வது படமாகும்.
சென்னையில் கிடைக்காத பாராட்டு
இதற்கான பாராட்டு விழா சென்னையில்தான் நடைப் பெற்றிருக்க வேண்டும்.
மும்பையில் விழா எடுத்த பால்கி
ஆனால் இயக்குநர் பால்கி, தனது ஷமிதாப் பட இசை வெளியீட்டு விழாவை இளையராஜாவுக்கான பாராட்டு விழாவாக மாற்றினார்.
திரண்டு வந்து வாழ்த்திய பிரபலங்கள்
பாலிவுட் பிரபலங்கள் அவ்வளவு பேரையும் திரள வைத்து, இளையராஜாவை கவுரவப்படுத்தினார்.
அமிதாப் -ரஜினி -கமல்
அமிதாப் பச்சன் தலைமையில் நடந்த இந்த விழாவில், ரஜினி, கமல், ஸ்ரீதேவியும், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யா ராய், போனிகபூர், தனுஷ், அக்ஷரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறும்புக்கார இளையராஜா
விழாவில் ரஜினி பேசுகையில், "இளையராஜாவை 1970-ல் இருந்தே தெரியும். அப்போது மிகவும் குறும்புக்காரராக இருந்தார்.
இப்போ ராஜா சாமி
இப்போது அவரிடம் பெரிய மாற்றம். உடையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவரை ராஜா சாமி என்றுதான் நான் எப்போதும் அழைப்பது வழக்கம்.
மகான் ராஜா
இன்று அவர் ஒரு மகான் போல ஆகிவிட்டார். அவரது சாதனையை யாராலும் தொட முடியாது, " என்றார்.
Post a Comment