என் பெயரைப் பயன்படுத்தி வணிக விளம்பரங்கள் கொடுத்து சிலர் மோசடி செய்வதாக காஜல் அகர்வால் புகார் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாதில் கட்டப்பட்ட பெரிய மால் ஒன்றை காஜல் அகர்வால் வந்து திறக்கப் போவதாக ஒரு பெரிய விளம்பரம் வெளியானது.
நகரெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளனழ.
இதுபற்றி காஜல் அகர்வால் கவனத்துக்கு வந்ததும் அதிர்ச்சியானார். அப்படி ஒரு விழா நடப்பதே தனக்குத் தெரியாது என்றும் தன்னை அழைக்காமலேயே விளம்பரத்துக்காக தனது பெயரை போலியாக பயன்படுத்தி இருப்பதாகவும் ஆவேசமாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து காஜல்அகர்வால் கூறுகையில், "வணிக வளாகம் ஒன்றை நான் திறந்து வைப்பதாக விளம்பரம் வந்துள்ளது. அதுமாதிரி விழாவுக்கு வரும்படி யாரும் என்னை அணுகவில்லை. எனக்கு தெரியாமல் அப்படி விளம்பரம் கொடுத்துள்ளனர். என்னிடம் அமைதி பெறாமல் எனது பெயரைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இது நேர்மையற்ற செயல். கண்டிக்கத்தக்கதாகும்," என்றார்.
Post a Comment