எங்களுக்காக ரஜினி தயாரிப்பாளரிடம் பேச வேண்டும்! - 'விநியோகஸ்தர்கள்'

|

ரஜினியிடம் நாங்கள் நஷ்டஈடு கேட்கவில்லை. அவரது கவனத்தைக் கவரவே இந்த உண்ணாவிரதம் நடத்துகிறோம் என லிங்கா நஷ்டக் கணக்கு காட்டும் சில விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.

எங்களுக்காக ரஜினி தயாரிப்பாளரிடம் பேச வேண்டும்! - 'விநியோகஸ்தர்கள்'

இதுகுறித்து நேற்று சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர்கள் கூறுகையில், "லிங்கா இழப்பை ஈடு கட்டச் சொல்லி நாங்கள் ஈராஸ் நிறுவனத்திடம் கேட்டோம். அவர்கள் எங்களுக்குத் தெரியாது என்கிறார்கள். வேந்தர் மூவீசிடம் கேட்டால் அவர்களிடமிருந்தும் பதிலில்லை. வியாபாரத்தில் லாப நஷ்டம் சகஜம் என்கிறார் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.

எனவேதான் நாங்கள் ரஜினியை இதில் தலையிடச் சொல்லி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துகிறோம். ரஜினியிடம் நஷ்ட ஈடு கேட்கவில்லை. எங்களுக்காக அவர் தயாரிப்பாளரிடம் பேச வேண்டும்," என்றனர்.

 

Post a Comment