சென்னை: பொங்கல் அன்று விஜய் தான் நடித்து வரும் படத்தின் தலைப்பை ட்விட்டரில் ரசிகர்களிடம் தெரிவிக்க உள்ளார்.
விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் பேன்டஸி படத்தில் நடித்து வருகிறார். படத்தில் ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா என இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். மேலும் இந்த படம் மூலம் பல காலம் கழித்து கோலிவுட்டுக்கு வந்துள்ளார் ஸ்ரீதேவி.
இந்நிலையில் விஜய் படத்திற்கு மாரீசன், புலி, கருடா என பெயர் வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. படத்தில் விஜய் குள்ள மனிதராக நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனா் அவர் குள்ள மனிதராக நடிக்கவில்லையாம்.
மேலும் தனது படத்தின் தலைப்பை விஜய் பொங்கல் அன்று ட்விட்டரில் அறிவிக்க உள்ளாராம். விஜய் ட்விட்டரில் அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ஹீரோயின்களை விட ஸ்ரீதேவிக்கு தான் அதிக சம்பளம் என்று கூறப்படுகிறது.
Post a Comment