திருவண்ணாமலையில் ஆட்டோவில் கிரிவலம் வந்த சந்தானம்

|

தனது பிறந்த நாளையொட்டி திருவண்ணாமலைக்குச் சென்ற நடிகர் சந்தானம், ஆட்டோவில் ஏறி கிரிவலம் வந்தார்.

நடிகர் சந்தானம் நேற்று தனது 35-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், பின்னர் மலையை சுற்றி கிரி வலம் புறப்பட்டார்.

திருவண்ணாமலையில் ஆட்டோவில் கிரிவலம் வந்த சந்தானம்

ஆட்டோவில் கிரிவலம் சென்ற அவர் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் இறங்கி தரிசனம் செய்தார். அப்போது முதியவர்களுக்கு அன்னதானம், போர்வைகள் வழங்கினார்.

நடிகர் சந்தானத்தைப் பார்க்க ஏராளமானோர் திரண்டுவந்தனர்.

 

Post a Comment