இதுபோல் இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா? - கண்ணீர் வடித்த ராக்லைன் வெங்கடேஷ்!

|

யாருக்கும் அத்தனை சுலபத்தில் கிடைக்காத வாய்ப்பை லிங்கா மூலம் எனக்கு ரஜினி வழங்கினார். ஆனால் அந்தப் படத்தை சரித்திர வெற்றிப் படமாக ஆக்கும் வாய்ப்பைக் கெடுத்துவிட்டார்கள் சிங்கார வேலனும் அவரது கூட்டாளிகளும் என்று கண்கலங்கக் கூறினார் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.

இதுகுறித்து அவர் மீடியா நிருபர்களிடம் பேசுகையில், "எப்பேற்பட்ட வாய்ப்பு இது? நான் ரஜினி சாரை நடிகராகப் பார்க்கவில்லை. அவரது தீவிர ரசிகன் நான். தன் ரசிகனைத் தயாரிப்பாளராக்கிப் பார்த்தார் ரஜினி சார். அவர் என் தெய்வம். அவரை வைத்து நான் தயாரித்த முதல் படம் இது. இந்தப் படம் எப்படிப்பட்ட வெற்றியைப் பெற்றிருக்க வேண்டும்... இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை கெடுத்துவிட்டார்களே.... இதைக் கெடுத்ததை என்னால் மன்னிக்கவோ மறக்கவோ முடியாது சார்!" என்றார்.

இதுபோல் இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா? - கண்ணீர் வடித்த ராக்லைன் வெங்கடேஷ்!

-இந்த வார்த்தைகளை வெங்கடேஷ் சொன்னபோது, உணர்ச்சி மேலீட்டால் கண்கலங்கினார்.

மேலும் கூறுகையில், "பணம் என்பது ஒரு பொருட்டல்ல... மனிதர்கள்தான் முக்கியம் சினிமா என்பது ஒரு குடும்பம். இதில் சட்ட நடவடிக்கை எடுத்தால் கசப்பு மட்டும்தான் மிஞ்சும். நான் அதை விரும்பவில்லை. ஆனால் என்னால் சிங்கார வேலனை மட்டும் மன்னிக்கவே முடியாது. என் தெய்வம் ரஜினியின் நல்ல படத்தை திட்டமிட்டுக் கெடுத்த அவர் அதற்கான பலனைப் பெறுவார்.

31 படம் தயாரித்திருக்கிறேன். 30 ஆண்டுகள் சினிமா தொழில் செய்கிறேன். ஆனால் படம் வெளியான நான்காவது நாளே அதைக் கெடுக்க பிரச்சாரத்தை ஆரம்பித்து, நான்காவது வாரத்தில் உண்ணாவிரதம் வரை கொண்டு போன ஒரு நிலைமையை இங்கேதான் பார்க்கிறேன். இது நிச்சயம் நஷ்ட ஈடு கேட்டு நடந்த உண்ணாவிரதமில்லை என்பதை மக்கள் அறிவார்கள்," என்றார்.

 

Post a Comment