அமிதாப் தலைமையில் மும்பையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா- முன்னணி கலைஞர்கள் பங்கேற்பு

|

சென்னை: ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வரும் 20-ஆம் தேதி மும்பையில் அமிதாப் பச்சன் தலைமையில் பாராட்டு விழா நடக்கிறது.

பாலிவுட் திரையுலகம் சார்பில் நடத்தப்படும் இந்தப் பாராட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை இயக்குநரும் தயாரிப்பாளருமான பால்கியும் அமிதாப் பச்சனும் செய்து வருகிறார்கள்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பால்கி கூறியது:

தற்போது எனது இயக்கத்தில் இளையராஜா இசையமைத்து வரும் ஷமிதாப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 20-ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.

அமிதாப் தலைமையில் மும்பையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா- முன்னணி கலைஞர்கள் பங்கேற்பு

இந்த விழாவில் தமிழ், இந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிப் படங்களுக்கு இசையமைத்து ஆயிரம் படங்கள் என்ற மைல் கல்லை எப்போதோ தாண்டிவிட்ட இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தவுள்ளோம். இதற்கான தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அனைவருக்கும் அழைப்புகளை அமிதாப் பச்சனே அனுப்பி வருகிறார்.

விழாவில் பாலிவுட்டின் முன்னணி இசைக் கலைஞர்கள், பின்னணி பாடகிகள் லதா மங்கேஷ்கர், ஜானகி, பி.சுசீலா உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

இளையராஜா இசையமைத்த படங்களில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். விழாவில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இளையராஜாவும் பாடுகிறார்.

மேடையில் அவர் பாடுவதை, இசையமைப்பதை பார்ப்பதே ஒரு பரவசமான அனுபவம். எனவே செய்தியாளர்களான நீங்களும் மும்பைக்கு வாங்க," என்றார்.

ஷமிதாப் படத்தில் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒரு பாடலை அமிதாப் பச்சன் பாடியுள்ளார்.

 

Post a Comment