சித்து-சமந்தா காதல் முறிவுக்கு பின்னால் கன்னட நடிகை?

|

சென்னை: சித்தார்த்தும், சமந்தாவும் பிரிய கன்னட நடிகையான தீபா சன்னதி காரணம் என்று கூறப்படுகிறது.

சித்தார்த்தும், சமந்தாவும் தங்கள் காதலை ஒப்புக்கொள்ளாவிட்டாலும் கடந்த 2 ஆண்டுகளாக ஜோடி போட்டு பல இடங்களுக்கு சென்றனர். ஜாடை மாடையாக காதல் பற்றி பேசிய அவர்கள் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அவர்களின் காதல் முறிந்து ஆளுக்கொரு பக்கம் சென்றுவிட்டனர்.

சித்து-சமந்தா காதல் முறிவுக்கு பின்னால் கன்னட நடிகை?

சமந்தா அண்மை காலமாக படங்களிலும், நிஜத்திலும் ஓவர் கவர்ச்சி காட்டுவது சித்தார்த்துக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் அவர்களின் காதல் முறிந்துவிட்டது என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர்கள் பிரிந்ததற்கு வேறு ஒரு காரணம் கூறப்படுகிறது.

சித்தார்த் நடித்து வரும் எனக்குள் ஒருவன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் தீபா சன்னதி நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்கையில் சித்தார்த், தீபா இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகிவிட்டதாம். அதனால் தான் சித்தார்த்-சமந்தாவுடனான காதல் முறிந்தது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

சித்தார்த்-சமந்தா பிரிந்தபோதிலும் ஒருவரைப் பற்றி மற்றொருவர் குறை கூறாமல் தங்களின் வேலையை கவனித்து வருகிறார்கள்.

 

Post a Comment