மருதநாயகம் படம் நிச்சயம் உருவாகும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இன்று தனது உலகநாயகன் ட்யூப் இணையதளம் வாயிலாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சமீப காலமாக நிறைய பேர் எனது மருதநாயகம் குறித்துப் பேசி வருகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் படத்தை நான் இன்னும் முடிக்கவில்லை.
ஆனால் அந்தப் படம் குறித்து இன்னும் பலர் பேசி வருவது சந்தோஷமாக உள்ளது.
இந்தப் படத்தை நிச்சயம் முடித்து வெளியிடுவேன். சமீபத்தில் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பர் மருதநாயகத்தை தான் தயாரித்து வெளியிடத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
அவர் பெயரை இப்போது சொல்வதாக இல்லை. விரைவில் அதுகுறித்து பேசுவேன். நிச்சயம் மருதநாயகம் வெளியாகும்," என்றார்.
Post a Comment