என்னை அறிந்தால் படத்தை ரசிகர்களுடன் ஆல்பட் தியேட்டரில் பார்த்து ரசித்தார் அஜீத்தின் மனைவி ஷாலினி.
என்னை அறிந்தால் படம் இன்று காலை வெளியானது. உலகம் முழுவதும் 1000 க்கும் மேற்பட்ட அரங்குகளில் இப்படம் வெளியானது.
தியேட்டர்களில் என்னை அறிந்தால் படம் பார்க்க அதிகாலையிலேயே ரசிகர்கள் திரண்டார்கள். காலை 5 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. ஆரவாரமாக சென்று படத்தைப் பார்த்தனர்.
எழும்பூர் ஆல்பட் தியேட்டரில் அஜீத் ரசிகர்கள் சார்பில் ரசிகர்கள் அஜீத் கட்அவுட்கள் வைத்து இருந்தார்கள். கொடி தோரணங்களும் கட்டி இருந்தனர். பட்டாசு வெடித்து இனிப்புகளும் வழங்கினார்கள்.
இந்த தியேட்டரில் அஜீத் மனைவி ஷாலினி ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்து மகிழ்ந்தார்.
என்னை அறிந்தால் படத்தை திரையிடக் கூடாது என்று தியேட்டருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து இருந்தது. இதனால் அனைத்து தியேட்டர்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Post a Comment