சென்னை: தமிழில் ஓஹோ வென இருந்த காலத்திலேயே, மறதி படம் மூலம் அக்கட தேசம் சென்ற நடிகை இவர். அரசனை நம்பி புருஷனையும் கை விட்ட கதியாக, தற்போது பட வாய்ப்புகளே இல்லாமல் தவித்து வருகிறார்.
இவரை விட வயதில் மூத்தவர்கள் எல்லாம் இன்னமும் டூயட் பாடிக் கொண்டிருக்க, நடிகையை அணுகும் தயாரிப்பாளர்கள் மட்டும், அக்கா, அண்ணி வேடத்தோடு தான் செல்கிறார்களாம். அதிகம் நம்பிய வடக்கிலும், எல்லாம் நல்லதுக்குத் தான் என ஒரே ஒரு படம் தான் கையில் உள்ளதாம்.
எனவே, நடிகை கையில் உள்ள ஒரு படத்தைத் தான் மலையாக நம்பியுள்ளாராம். வழக்கம் போல, அதுவும் சொதப்பி விட்டால், அடுத்து டும் டும் டும் தான் என தெரிந்தவர்களிடம் புலம்பி வருகிறாராம்.
இது தொடர்பாக ஏற்கனவே வீட்டில் சொல்லி விட்டாராம். மற்ற நடிகைகளைப் போலவே நல்ல தொழிலதிபர் மாப்பிள்ளையாகப் பார்க்கச் சொல்லி இருக்கிறாராம். அப்படிக் கிடைத்தால் பிசின் போல ஒட்டிக் கொண்டு குடும்பத்தலைவியாக செட்டில் ஆகி விடலாம் என்பது நடிகையின் திட்டமாம்.
Post a Comment